என் அப்பாவின் சொந்த நடையில் படம் பிடித்து எழுதிய கவிதை பகிரவும் விமர்சிக்கவும்.
" பாட்டியும் பேரனும் "
முத்துப்பல்லம்மா முனியம்மா அம்மம்மா
அழகம்மா உன்சிரிப்பழகம்மா!
ராஜசிரிப்பப்பா ராணாப்பா அப்பப்பா,
அழகப்பா உன்சிரிப்பழகப்பா!
பல்லுள்ள எல்லோருக்கும்
உன்சிரிப்பு வருமாம்மா!
பல்லில்லா எல்லோருக்கும்
உன்சிரிப்பு வருமாப்பா!
அழகுசிரிப்புக்கு ஆயிரங்கோடி,
இருவருக்குமே ஈடாகுமா?
யார் சிரிப்பழகு ?
அன்றும் இன்றும் என்றும்
இருவரின் அழகுச்சிரிப்பு
சிறப்புத்தான்
By
" திரு.தங்க.ராசேந்திரன் "
No comments:
Post a Comment